கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்பவரும் மேலும் 3 நபர்களும் தங்கள் ஊரில் நடந்துள்ள ஈமச்சடங்கிற்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்றுள்ளனர்.
சந்தூர் பகுதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிய போது கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.