பிஎஸ்என்எல் 5G சேவை ஜூன் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடர்பான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 4ஜி சேவையை வலுப்படுத்த நாடு முழுவதும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட டவர்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த ஒரு லட்சம் டவர்களும் 5ஜி சேவைக்காக மாற்றியமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள அவர், ஜூன் மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் என அறிவித்துள்ளார்.
மேலும், பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பை மேம்படுத்த 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3G சேவைகளை படிப்படியாக நீக்கும் பணி நடைபெற்று வருவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.