சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
தண்டே வாடா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது நக்சலைட் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.