தேனி ஆண்டிப்பட்டி சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை அடியோடு சரிந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய் தற்போது விலை சரிந்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முகூர்த்த நாட்களும் இல்லாத காரணத்தால் வியாபாரிகள் வருகையும் குறைந்து காணப்படுகிறது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், முருங்கைக்காய்க்குக் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.