டீசல் சிக்கனம் தொடர்பாகக் கோவையில் போக்குவரத்துக் கழக அதிகாரிக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டி புதூர் பணிமனையின் கிளை மேலாளராக மணிவண்ணன் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இவர் தமிழக அரசின் விடியல் பயணத் திட்டத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததால் மோதல் போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டீசல் சிக்கனம் தொடர்பாக மணிவண்ணனுக்கும், திமுக ஆதரவு தொழிலாளர் முன்னேற்றப் பேரவை சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.