ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 5ஜி மற்றும் பி-3 அல்ட்ரா ஆகிய இரு அதிநவீன ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றுக்கான விற்பனை இன்று தொடங்கியது. ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான அம்சங்களுடன், 7 மில்லி மீட்டர் அளவில் மெல்லிய வடிவமைப்புடன், வளைந்த டிஸ்பிளே மற்றும் தண்ணீருக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஏற்றவகையில் வாட்டர் புரூப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.