5 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க சீனாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியாவுக்கான சீன தூதர் சூ வெய் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து வந்த எல்லை மோதல்களை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சீனா – இந்தியா இடையிலான இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இந்தியாவுக்கான சீன தூதர் சூ வெய் தெரிவித்துள்ளார்.