பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக பாஜக எம்பி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.