கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2025, 03:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமா ரதி ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும், திமுகவில் எம்எல்ஏ பொன்முடிக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக மாவட்ட மகளிரணி தலைவி சுதா எழில் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கொட்டும் மழையில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா சுரேஷ் மற்றும் தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமா மாலினி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

Tags: Coimbatore college student sexually assaulted - BJP women's wing protests across Tamil Naduபாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

Next Post

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies