நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் மண் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேளுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிம்மன் புதூர் கரட்டு அடிவாரத்தில், திமுகவினர் கடந்த 3 ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு மண் கடத்தலில் ஈடுபட்ட ஏழு லாரிகள் உள்ளிட்ட வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, பாஜக நிர்வாகிகளும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.