பேராசிரியர் பரமசிவனின் 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எளிமையின் மறு உருவமாக இருந்த பேராசிரியர் பரமசிவன், 1998-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது 27-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது உருவப் படத்திற்கு RSS அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் RSS பொறுப்பாளர்கள் குமரேஷ், ராஜசேகர் முத்துராமலிங்கம், ABVP பொறுப்பாளர்கள் சிவகுமார், பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.