இந்திய-யூரேசியா தட்டுகள் மோதல் - நொறுங்கிய மியான்மர், குலுங்கிய தாய்லாந்து!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய-யூரேசியா தட்டுகள் மோதல் – நொறுங்கிய மியான்மர், குலுங்கிய தாய்லாந்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 30, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சக்திவாய்ந்த நிலநடுக்கம் மியான்மரை புரட்டி போடப் பட்டுள்ளது. பக்கத்து நாடான தாய்லாந்தையும் சின்னாபின்னமாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணம் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் மாண்டலே நகருக்கு அருகிலுள்ள சாகிங் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 1500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இடிந்து விழுந்த மழலையர் பள்ளியில் 50 குழந்தைகள் மற்றும் 6 ஆசிரியர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம் தடை காரணமாக மியான்மரின் பெருநகரங்கள் எல்லாம் இருளில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணிகளில் ராணுவம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

உலகின் மிகவும் நில அதிர்வுகள் ஏற்படும் நாடுகளில் மியான்மரும் ஒன்றாகும். இந்திய தட்டுக்கும் யூரேசியா தட்டுக்கும் இடையிலான தட்டு, மியான்மரில் நடுவில் வெட்டுகிறது. இப்படி இரண்டு டெக்டோனிக் தகடுகளுக்கு இடையிலான எல்லையில் மியான்மர் அமைந்துள்ளது.

இந்த இரண்டு தட்டுகளும்,வெவ்வேறு வேகத்தில் ஒன்றையொன்றுஅடிமட்டத்தில்,கடந்து செல்கின்றன. இது பொதுவாக குறைவான சக்தி வாய்ந்த “ஸ்ட்ரைக் ஸ்லிப்” நிலநடுக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது சுமத்ரா போன்ற “துணை மண்டலங்களில்” ஏற்படுவதை விட ஆபத்து குறைவான நில நடுக்கமாகும். ஆனால், ஒரு தட்டு மற்றொன்றின் கீழ் சரியும் போது, 8 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்தப் பகுதி, பல நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி வழக்கமாக நிலநடுக்கம் வராத பகுதி என்பதால், நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலான உள்கட்டமைப்புகள் கட்டப் படவில்லை என்று சொல்லப் படுகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் மியான்மரில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும். 10,000 முதல் 1,00,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags: earthquake in myanmar nowmyanmar earthquake news todaymyanmar earthquake 2025myanmar earthquake todayearthquake hits myanmarEarthquake in Myanmar!Myanmar earthquakemyanmar earthquake newsthailand earthquake
ShareTweetSendShare
Previous Post

எம்புரான் திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் – வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்!

Next Post

ஒன்று முதல் 5-ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு – தொடக்கக் கல்வி இயக்குநரகம்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies