குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெடிவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.