திருப்பதி – பழனி இடையிலான பேருந்து சேவை ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தொடங்கிவைத்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது திருப்பதியில் இருந்து பழனிக்கு பேருந்து சேவை வேண்டும் எனப் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து திருப்பதியில் இருந்து பழனிக்கு அரசுப் பேருந்து சேவையைப் பவன் கல்யாண் தொடங்கிவைத்தார்.