தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி-யாக இருந்த சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த துறையின் டிஜிபி பொறுப்பை ஐஜி-யாக உள்ள ரூபேஷ் குமார் மீனா கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த கபில் குமார் சி.சரத்கர் அமலாக்கத்துறை ஐஜி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயேந்திர பிடாரி ஐபிஎஸ், காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி-யாக இருந்த சத்ய பிரியா ஐபிஎஸ் காவலர் நல்வாழ்வுத்துறை ஐஜி-யாகவும், சென்னை ஊழல் தடுப்புத்துறை இணை இயக்குநராக இருந்த சந்தோஷ் குமார், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, அமலாக்கத்துறை ஐஜி-யாக இருந்த கார்த்திகேயன், சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராகவும், காவலர் நல்வாழ்வுத்துறை டிஐஜி-யாக இருந்த துரை ஐபிஎஸ், காலியாக இருந்த தலைமையக டிஐஜி பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.