ஆனந்த் அம்பானியின் பாதயாத்திரையில் பாகேஸ்வர் தாமின் தலைவர் தீரேந்திர கிருஷ்ணா சாஸ்திரி கலந்து கொண்டுள்ளார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது 30-வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் இருந்து துவாரகா வரையிலான பாதயாத்திரையைத் தொடங்கினார்.
140 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடக்கவுள்ளார். இந்த நிலையில் அவரது பாதயாத்திரையில் பாகேஸ்வர் தாமின் தலைவர் தீரேந்திர கிருஷ்ணா சாஸ்திரி பங்கேற்றார்.