யூனுஸிடம் பிரதமர் மோடி கண்டிப்பு : இந்துக்களின் பாதுகாப்பு அநீதி குறித்து விசாரணை!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

யூனுஸிடம் பிரதமர் மோடி கண்டிப்பு : இந்துக்களின் பாதுகாப்பு அநீதி குறித்து விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 9, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியை வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.  வங்கதேசத்தில்,  இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஜனநாயக விரோத செயல்கள் குறித்து விசாரிக்கவும் யூனுஸை, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.  இந்த சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

BIMSTEC – வங்காள விரிகுடா பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இது ஏழு தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச கூட்டமைப்பாகும்.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பில், இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் உள்ளன. பிம்ஸ்டெக்  கூட்டமைப்பின் 6 ஆவது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது.

முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில், வங்கதேச இடைக்கால தலைவரான யூனுஸை சந்திக்கும் விவரம் இல்லை.

ஆனாலும், பிரதமர் மோடியை யூனுஸ் சந்தித்துப் பேசியுள்ளார். முன்னாள் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு,  முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு   இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

சிலநாட்களுக்கு முன்னதாக, சீனா சென்றிருந்த யூனுஸ், இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் சூழப் பட்டுள்ளன. அதன் கடல் பகுதியின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம் என்று கூறினார். மேலும்,  சீனா தனது பொருளாதார நடவடிக்கைகளை வங்காள விரி குடாவில் அதிகரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். யூனுஸின் பொறுப்பற்ற இந்தப் பேச்சுக்கு, இந்தியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்

இந்தச் சூழலில், பிரதமர் மோடி- முகமது யூனுஸ் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும் என்று வங்க தேச அரசு தரப்பு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதல், வங்க தேசத்தில்,  இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் பற்றி கேள்வி எழுப்பியதோடு, சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப் படவேண்டும் என்றும், அட்டூழியங்கள் குறித்து விசாரிக்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வங்கதேசத்துடன் நேர்மையான ஆக்கப் பூர்வமான உறவை உருவாக்குவதற்கான இந்தியாவின் விருப்பத்தையும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு  இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ள நிலையில், அவரை ஊழல் குற்றச்சாட்டில் விசாரிப்பதற்காக நாடு கடத்த வேண்டும் என்று யூனுஸ் கோரிக்கை வைத்தாக யூனுஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

யூனுஸ் பொறுப்பேற்றதிலிருந்தே ,இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. மாறாக, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் யூனுஸ் நெருக்கம் காட்டி வருகிறார்.  நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் Teesta நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் முதலாக இந்தியாவும், வங்கதேசமும் விவாதிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.

இந்தச் சந்திப்பு, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: Bangaladeshtamil janam tvPrime Minister Modi reprimands Yunus: Inquiry into the injustice of security of Hindus!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் தட்டுப்பாட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஓடை நீரை அருந்தும் அவலம்!

Next Post

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies