தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.