மேற்கு வங்க மாநிலத்தில் 70 ஆண்டுகள் பழமையான இரும்பாலையில் உள்ள குளிர்விப்பான்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன.
அம்மாநிலத்தில் பர்ன்பூரில் இரும்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் உட்கட்டமைப்பைச் சீரமைக்கும் வகையில், அங்குள்ள 5 குளிர்விக்கும் கோபுரங்களை வெடி வைத்துத் தகர்க்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி வெடிபொருட்கள் மூலம் 5 கோபுரங்களும் தகர்க்கப்பட்டன. அப்போது குளிர்விக்கும் கோபுரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுக்குநூறாக கீழே விழுந்தன.