சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹெபே மாகாணத்தின் செங்க்டே நகரில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு விதிமுறையை முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி முதியோர் இல்ல நிர்வாகியைக் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.