வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு என அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய மாநாட்டில், வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக்க உறுதி பூண்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிம் யோ ஜாங், வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடர்பாகப் பிற நாடுகள் ஆலோசிப்பது தங்கள் நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் எனக் கோபமாகத் தெரிவித்துள்ளார்.