பகவான் மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற பாஜக அரசு எப்போதும் பாடுபடும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பகவான் மகாவீரரின் கொள்கைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு, பிராகிருதம் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளோம், இது மிகுந்த பாராட்டைப் பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.