மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
மியான்மரில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை ஏதும் தகவல் வெளியாகவில்லை. மியான்மரில் கடந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
			















