சட்ட மேதை, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான இன்று சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்ட அம்பேத்கரின் கொள்கைகளையும், நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்வோம் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், போலி சமூக நீதி பேசி, பல ஆண்டு காலம் நம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேடதாரிகளை அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
அண்ணல் போற்றிய தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என அண்ணாமலை கூறியுள்ளார்.