சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகவான் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.