ராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், கேட்ட மதுவைக் கொடுக்காத ஊழியருடன் மதுபிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மதுபானம் இருக்கும்போதே ஸ்கேன் செய்ய முடியவில்லை எனக் கூறி தரவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போது ஊழியர் முறையாகப் பதிலளிக்காமல் மிரட்டும் தொணியில் பேசியநிலையில், அதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.