கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தர்மராஜ சுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள், பூசாரியிடம் துடைப்பம், முறத்தால் அடிவாங்கி விநோத வழிபாடு நடத்தினர்.
டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்ட வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த விழாவிற்காக 10 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் கோயில் பூசாரியிடம் துடைப்பம், முறத்தால் அடிவாங்கி வினோத வழிபாடு நடத்தினர்.