பிரேசில் சென்றுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அங்குள்ள விவசாய நிலங்களைப் பார்வையிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பிரேசிலில் உள்ள நுட்பங்களைக் கண்டு தான் மேலும் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இங்குத் தக்காளிச் செடிகளுக்கு ஊட்டப்பொருள் மற்றும் தண்ணீரை நுட்பங்களுடன் செலுத்தி பாசனம் செய்வது வியப்படையச் செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.