சென்னை பூந்தமல்லி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து மெட்ரோ ரயில் பில்லரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. குமணன்சாவடி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பில்லரின் மீது மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.