உலக மரபு நாள் கொண்டாட்டத்தையொட்டி மதுரை திருமலை நாயக்கர் மஹாலை கட்டணம் இன்றி பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் உலக மரபு நாள் ஏப்ரல் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஒரு வாரத்திற்கு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாகச் சுற்றிப் பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து மஹாலை சுற்றிப் பார்க்கச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.