K2-18b கிரகத்தில் உயிரினங்கள் அறிகுறிகள் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் சாதனை!
Jan 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

K2-18b கிரகத்தில் உயிரினங்கள் அறிகுறிகள் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் சாதனை!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் முறையாக K2-18b எனப்படும் தொலைதூர கிரகத்தில், உயிர்கள் வாழ்வதற்குச்     சாத்தியமான அறிகுறிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, பூமியில் வாழும் உயிரினங்களால் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் இரண்டு அரியவகை ரசாயனங்களை K2-18b கிரகத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்பது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சுற்றுப்பாதை விண்வெளி தொலைநோக்கி ஆகும். நமது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்க உதவும் ஒரு ‘கால இயந்திரம்’ இது என்றால் மிகையில்லை.

இந்த தொலைநோக்கி, சுமார்  100-200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி, 13.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பிறந்த முதல் விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கும் திறன் கொண்டதாகும்.

நட்சத்திரங்கள், வெளிக்கோள்கள் மற்றும் நமது சூரிய மண்டலத்தின் நிலவுகள் மற்றும் கோள்களின் மூலங்களைக் கண்காணிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தான்,  ஒரு தொலைதூர  கிரகத்தில்  உயிர் இருக்கலாம் என்று நாசா கண்டு பிடித்துள்ளது.  K2-18 b என்னும் கிரகம் நமது பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் 2015 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப் பட்டது.

K2-18b பூமியை விடப் பெரியதாகவும் ஆனால் நெப்டியூனை விடச் சிறியதாகவும் இருப்பதால் ‘சூப்பர் எர்த்’ என்று அழைக்கப்படுகிறது. சிம்ம நட்சத்திர கூட்டத்தைச் சேர்ந்த இந்த கிரகம், பூமியை விட எட்டு மடங்கு நிறை கொண்டதாகும். மேலும், பூமியின் ஆரத்தை விட 2.6 மடங்கு ஆரம் கொண்டதாகும்.

DMS  எனப்படும்  டைமெத்தில் சல்பைடு  மூலக்கூறை இந்த கிரகத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  DMS பூமியில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வேதியல் பொருளாகும்.

K2-18b கிரகத்தின்  உட்புறத்தில்  உயர் அழுத்தப் பனிக்கட்டி இருக்கலாம் என்றும், மேற்புறத்தில் மெல்லிய ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலம் மற்றும் கடல் இருக்கலாம் என்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் நட்சத்திர ஒளியின் ஒரு பகுதியை உறிஞ்சுகின்றன, ஆனால் ஒவ்வொன்றும் ஒளியின் நிறமாலையில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச் செல்கின்றன.  அதன் மூலமே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலமும் நீர் பெருங்கடல்களும் கொண்ட ஒரு பாறை கிரகத்தை ‘ஹைசியன்’ உலகம் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள். பொதுவாக, ஹைசியன் உலகங்கள் தண்ணீரால் மூடப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும், புதிய கிரகம் வெப்பமாக இருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.

ஏற்கெனவே, 2019 ஆம் ஆண்டில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இந்த கிரகத்தின்  வளிமண்டலத்தில்   நீராவியைக் கண்டறிந்ததது.  அப்போதே இது நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே மனிதர்கள் வாழக் கூடிய உலகம் இருப்பதாக உறுதிப் படுத்தபட்டது.

2023ம் ஆண்டில், இதே தொலைதூர கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு CO2 இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

K2-18b கிரகத்தில் DMS இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதன் இருப்பை உறுதிப்படுத்தக் கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.  அந்த முடிவுகள் இன்னும் 12 மாதங்களுக்குள் இது உறுதி செய்யப்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கோளில், DMS அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags: Scientists discover signs of life on planet K2-18b: AchievementK2-18b கிரகத்தில் உயிரினங்கள்விஞ்ஞானிகள் சாதனை
ShareTweetSendShare
Previous Post

கோபாலபுரம் தொழில்துறை கொள்கை – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

சென்னையில் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை தொடக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies