மேற்குவங்கத்தில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை தொடர்பாகக் கருத்து தெரிவித்த, வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், மேற்குவங்கத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வங்கதேசம் தெரிவித்த கருத்துகளை தாங்கள் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டை மூடி மறைக்க இது கபட நாடகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.