மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.