மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர் மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செய்தி கொடுத்து ஒருவர் கட்சியை சிதைப்பதாக விமர்சித்துள்ளார்.
மதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எப்போதும் அரணாக இருப்பேன் என தெரிவித்துள்ள துரை வைகோ, தன்னால் மதிமுகவிற்கு எள் அளவு கூட சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.