தான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உட்கட்சி விவகாரத்தை வெளியிட்டதே குழப்பத்திற்கு காரணம் என தெரிவித்தார்.
கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் சேனாதிபதிகள் தான் என கூறிய அவர், கட்சி யார் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவித்தார்.