"மண் ஆணி" திட்டம் : நிலச்சரிவை தடுக்க புதிய முயற்சி - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“மண் ஆணி” திட்டம் : நிலச்சரிவை தடுக்க புதிய முயற்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 20, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் நிலச்சரிவை தடுக்க மண் ஆணி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைத் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு மலைச் சாலைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் இந்த சாலைகளில், மழைக் காலங்களில் மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த இன்னல்களை போக்கும் விதமாக மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில், புதிய தொழில்நுட்பமான “SOIL NAIL” எனப்படும் மண் ஆணியை நெடுஞ்சாலைத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

1973-ம் ஆண்டு பிரான்சில் முதல்முதலாக தொடங்கப்பட்ட இந்த SOIL NAIL திட்டம், அதன் பின் 1976-ல் அமெரிக்கா வரை விரிவடைந்தது. ஏற்கனவே இந்தியாவின் எல்லையோர பகுதிகளான அருணாச்சல பிரதேசம், உத்தராஞ்சலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி ஐஐடி தொழில்நுட்ப பேராசிரியர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆய்வு செய்யப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பம், நீலகிரி மலைப்பகுதிகளில் முதன்முறையாக தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மண்ணின் தன்மை குறித்து முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணின் பிடிப்பிற்கு தகுந்தவாறு 3 மீட்டர் முதல் 20 மீட்டர் வரையிலான இரும்பு குழாய்கள் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் மூலம் மண்ணுக்குள் பொருத்தப்படுகின்றன. சீரான இடைவெளியில் செலுத்தப்பட்ட இரும்பு குழாய்களுக்குள் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட சிமெண்ட் கலவைகள் ஊற்றப்படுகின்றன.

இது நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தூண்களைப்போல் செயல்பட்டு, மண்ணின் உறுதித்தன்மையை பலப்படுத்தி மண் அரிப்பை தடுக்க உதவும் விதமாக வடிவமைக்கப்படுகிறது.

தொடர்ந்து மற்றொரு தொழில்நுட்பம் மூலம் அதில் புற்கள் முளைக்க வழிவகை செய்யப்பட்டு, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளில் மட்டுமே கிடைக்கும் ‘HYDRO SEED’ என்ற புல் விதைகள் அதன் மீது தூவப்படுகின்றன. இரண்டு அடுக்குகளாக புற்கள் முளைக்க இடைவெளிவிட்டு கம்பி வலைகள் மூலம் அப்பகுதிகள் மூடப்படுகின்றன.

தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் பாய்ச்சி குறிப்பிட்ட அளவு புற்களை வளரச்செய்வதன் மூலம், அதன் வேர்கள் அடிவரை சென்று மண் ஆணிகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறிப்பிட்ட பகுதிகளில் மழைநீர் ஊடுருவி வழிந்தோட ஏதுவாக தனித்தனி குழாய்களும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தாலும், மண்ணின் தன்மையாலும் இயல்புநிலைக்கு மாறுபட்ட சூழலை ஏற்படுத்தும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறையினர் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி எந்த அளவிற்கு பலன் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: landslideshighway departmentMettupalayam-Kotagiri roadsoil nail technologysoil erosion.
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி மலைப் பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்!

Next Post

கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை அமித் ஷா, இபிஎஸ் முடிவு செய்வார்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies