தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய உறுப்பினர் இனிகோ இருதயராஜ், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயரில் வைக்கும் நடைமுறையை முறையாக பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை அமைக்க தொழிலாளர் நலத்துறையிடம் பேசியிருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுனங்களுக்கு 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் பதில் அளித்தார்.