கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார்.
இது குறித்து வாட்டிகன் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது88), வாட்டிகனில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைபாடு காரணமாக நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், அண்மையில் தான் வீடு திரும்பினார்.
தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமை இவரையே சேரும். அவரது மறைவு உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.