தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் குற்றவாளிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
திறந்த எல்லைக் கொள்கையின் மூலம் கோடிக்கணக்கான குற்றவாளிகளை நம் நாட்டிற்குள் வேண்டுமென்றே ஜோ பைடன் அனுமதித்தார் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் மிகவும் திறமையற்றவர் எனவும், தாம் என்ன செய்கிறோம் என்பதே முற்றிலும் தெரியாத ஒரு மனிதர் எனவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.