கோவையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் தங்களைத் தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆட்சியரிடத்தில் புகார் அளித்தனர்.
உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாழ்விட வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போது மற்ற குடியிருப்பு வாசிகள் தரக்குறைவாக நடத்துவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தங்களுக்கு எனப் பிரத்தியேக குடிநீர் இணைப்பை வழங்கிட வேண்டும் என்றும் தங்களைத் தரக்குறைவாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்தனர்.