நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் என்ற மாணவர், UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
2024ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் இறுதி தரவரிசை பட்டியலில் மொத்தமாக ஆயிரத்து ஒன்பது பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவிலும் சிவச்சந்திரன் 23வது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.