ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹெல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, தனது சவுதி பயணத்தை ரத்து செய்துகொண்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார். விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் இருந்தார்.
மத்திய அமைச்சரவையை கூட்டி அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.