சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹெல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, தனது சவுதி பயணத்தை ரத்து செய்துகொண்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.