வெனிசுலாவின் கராகஸில் புனித பவுலின் நசரேன் பாரம்பரிய ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிலுவையைச் சுமந்து செல்லும் இயேசுவின் உருவத்தை, பிரகாசமான ஊதா நிற ஆடைகளை அணிந்த சிலர் தோள்களில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு இயேசுபிரானிடம் பிரார்த்தனை செய்தனர்.