போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, புதிய போப்பாக தேர்வாகும் வாய்ப்பில் இருப்பவர்கள் யார் என்கிற விபரம் வெளியாகி உள்ளது.
போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளைக் கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.
80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.
80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.
அதன்படி, ஜீன்-மார்க் அவெலின், பீட்டர் எர்டோ, மரியோ கிரெச், ஜுவான் ஜோஸ் ஓமெல்லா உள்ளிட்டோரில் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.