போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே காலமானார்.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.