திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அரசுப் பள்ளியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்கள் மிதிவண்டியில் தண்ணீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், அங்குப் பயிலும் மாணவர்கள் மிதிவண்டியில் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.