பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து மெட்டல் டிடெக்டர் கருவியுடன் நடைமேடையிலிருந்த பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.