ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கும் விதமாகக் கர்நாடகாவின் கலபுராகியில் பாகிஸ்தான் கொடியைச் சாலையில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் கலாபுராகியில் பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடியைச் சாலையில் ஒட்டி பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகக் கூறி 6 பேரை போலீசார் கைது செய்தனர்.