திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் மனு அளித்தனர்.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுந்தரவல்லி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், மத்திய அரசைக் குற்றம் சாட்டும் விதமான வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்த பாஜக மகளிர் அணியினர், சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.